உத்தமத் தமிழ் எழுத்தாளர்களில் முதலில் கண்ணுக்குப் படுவது சாரு நிவேதிதா. ஏழு எட்டு ஆண்டுகளாக இணையத்தில் அடிபட்டுக் கொண்டிருக்கும் பிரகிருதி. மெகா சீரியல் எழுதுபவர்களையும் மிஞ்சும் ஒரு வஸீகர படைப்பாளி. எதை எழுதினாலும் சொந்தக் கதை மாதிரியே பில்ட் அப் செய்வதால் ( பழைய கதை எல்லாம் உண்மைக்கதை என்று அவரே சொல்வதால் ) அக்கப்போர் வாசகர்களுக்கு நல்ல தீனீ. மனிதன் நல்ல உழைப்பாளி. தமிழ் டிவி பார்ப்பதேயில்லை என்று சொல்லிவிட்டு யு டியுப் பார்த்து உலக அறிவை வளர்த்துக் கொண்டு மற்றவர்களுக்கும் அதை வழங்கும் வள்ளல். எதிர்மறை வாதம் செய்தால் கவனம் ஈர்க்கலாம் (பெரியார் வழி ) என்று இவர் போட்டுத் தாக்குவது பிரபலங்களை. நோபல் பரிசு தனக்குத்தான் என்று இவர் சொன்னதை தவறாகப் புரிந்து கொண்ட சக ஜோல்னாப் பை , பல்லை உடைக்க முயன்ற கதை அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த காலத்தில் தானொரு பிக்பாக்கெட் என்று இவரே அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒரு சிலர் இவர் கதைகளையும் திருடியிருப்பதாக புரளி கிளப்பிய காலமும் உண்டு. சுஜாதா இறக்கும் வரை அவரைத் திட்டிவிட்டு பின்பு அவரைப் புகழ்ந்தது தள்ளியது இணையம் முழுக்க niரைந்து கிடக்கும் அவரது ரசிகர்களைக் கவரும் உக்திதானே
சினிமா இசை என்று பல்துறை வித்தகராக தன்னைக் காட்டிக் கொள்ளும் இவரது எழுத்துக்களில் ஒரு மிகைப்பட்ட அரை வேக்காட்டுத்தனம் தெரிவதை உணரலாம்.
வெகு ஜனப் பத்திரிக்கைகள் இவருக்கு சில காலம் வாழ்வு கொடுத்துப் பின் அதைப் பிடுங்கிக் கொண்டதில் வருத்தமே. மலையாள எழுத்தாளர்கள் மானாட மயிலாடப் பார்த்துக் குட்டிச் சுவராய்ப் போனதால் அங்கே பத்தி எழுதக் கூட ஆளில்லாமல் போய்விட்டது அதிர்ஷ்ட்டமே. மனுஷ்ய புத்திரன் இவரை மோடி மஸ்தான் எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாம்பு கீரி கதைகள் பல சொல்லும் இவர் ஒரு மோடி மஸ்தானைப் போல அடிக்கடி பணம் போடச் சொல்லி கேட்டுக் கொள்வார். இப்போதெல்லாம் நிஜ மோடி மஸ்தானைப் போல தனக்கு எதிர் மறையாக யார் நடந்தாலும் கெட்டது நடக்கும் என்று உடுக்கு அடிக்க ஆரம்பித்திருக்கிறார். தேர்தலுக்கு இவர் அடித்த குடுகுடுப்பை பலிக்காமல் போனது துரதிர்ஷ்டமே. அரைத்த மாவையே அரைக்காமல் நல்ல கதைகள் எழுதி சிறக்க வாழ்த்துக்கள்.
Sunday, May 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment