Sunday, June 28, 2009

மெத்தப் படித்தவர்கள்

ஆப்பிரிக்கா, லத்தின் அமேரிக்கா, ஐரோப்பா என்று உலக எழுத்தக்களை சிலாகித்து " நேக்கு இதெல்லாம் தெரியும் .. நோக்கு என்ன தெரியும் " என்ற ரேஞ்சில் உசுப்பேத்திக் கொண்டிருப்பவர்களையும் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று புரியாத மொழிக் கதைகளைப் படித்து தலை முடி பிய்த்துக் கொள்பவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. இதில் ஒருவர் சினிமா விமரிசனம் எழுத பலமுறை அதே படத்தைப் பார்க்கிறாராம், ஒருமுறை பார்க்கும் போதே மனதில் ஒட்ட வில்லைஎன்றால் அந்தப்படத்துக்கு விமரிசனம் எதற்கு?

Saturday, June 13, 2009

மனவெளியில்

மனவெளியில்
நடந்து போகும்
பாதை எங்கும் இருட்டு .....
யாரும் நடக்காத பாதையைத்
தேடி அலைகிறேன்...
புதிதாக நடப்பதற்கு
புதிதாக சொல்வதற்கு
புதிதாக எழுதுவதற்கு
தேடி அலைகிறேன்.......
அலைந்து களைத்த போதில்
மனம் சொல்லிப் போனது
உணர்தல் மட்டுமே புதியது..........


t

உங்களுக்கு என்று ஒரு கருத்து .........

தனக்கென்று ஒரு கருத்தும் இல்லாமல் அடுத்தவர் கருத்தைச் சுமக்கின்றவர்கள்..... உனக்குத் தெரிந்ததைவிட எனக்குத் தெரிந்த எழுத்தாளருக்குத்தான் எல்லாம் தெரியும் என்று அடுத்தவர் சொம்பு தூக்குபவர்கள்..... இவர்கள் ப்லோக் எழுதி யாருக்கு லாபம்.. எங்கேயோ எப்போதொ படித்த அரைகுறை வாசிப்புகள் .. உங்களுக்கு ஒருத்தரைப் பிடித்தால் கொண்டாடுங்கள், பாராட்டுங்கள் - ஆனால் தனிப்பட்ட முறையில் கண்ணியமில்லாமல் அடுத்தவர் பற்றியோ அவரை அவதூறு செய்யும் விமரிசனங்களுக்கு ஆமாம் போட்டோ உங்களது தனிப்பட்ட எண்ணங்களுக்கு சேறு பூசிக் கொள்ளாதீர்கள்.....