Saturday, July 18, 2009

ருத்ர தாண்டவம்

ரொம்ப வருடங்களுக்கு முன்னால் டாக்டர் ருத்ரனை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது அவர் மருத்துவராக பணியாற்றிக் கொண்டே மனநல மருத்துவம் படித்துக் கொண்டிருந்தார் ( நீ ஏன் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டரைப் பார்க்கப் போனாய் என்று கேட்காமல் இருக்க இந்த டிஸ்கி ).
ஏதோ விஷயமாய் அவரைப் பார்க்கப் போன ஏன் நண்பரோடு வேலை வெட்டி இல்லாமல் இருந்த நானும் சேர்ந்து கொண்டேன். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து வடக்கு உஸ்மான் ரோடில் திரும்பும் வளைவில் அவரது க்ளினிக் இருந்தது. இரவு ஒன்பது மணிக்கு க்ளினிக் மூடும் சமயமாகப் போனால் பார்த்துப் பேச சரியாக இருக்கும் என்பது நண்பரின் யூகம். அங்கே போனால் அதுதான் பீக் அவர் போல சரியான கூட்டம். பெஞ்சுகளில் வழிந்து நிரம்பிய ஏழை நோயாளிகள். அவர் பணி முடியும் வரை அவரது அறையிலேயே காத்திருந்தோம். திறந்திருந்த அடுத்த அறைக் கதவு வழியே அழகிய வீணை, ஓவியங்கள்.
சுரமும் இருமலும் என்று பலருக்கு வரிசையாய் மருத்துவம் பார்த்துக் கொண்டே இருந்தார் ருத்ரன். நடுவே ரொம்பவும் சோர்வாக வந்த சிலரிடம் சிம்டம்ஸ் கேட்டு விட்டு " காதிலே யாரவது பேசுற மாதிரி இருக்குதா ? " உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்தோடு ஆமாம் போட்டவர்கள் பலர். இதுதான் மன நோய்க்கான அறிகுறி . இப்போது சரி செய்யாமல் பேய் பிடிப்பது ஓட்டுவது என்று முத்த வைத்து கடைசியில் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்கிறார்கள் .
பூசாரிகளுக்கு காசு என்று வருத்தப் பட்டுக் கொண்டார். வந்தவர்கள் அனைவரும் ஏழைகள். சில பேர் காசில்லாமல் தயங்கினார்கள். பல பேர் அவர்களால் முடிந்ததை கசங்கிய நோட்டுக்களாகவும் காசுகளாகவும் மேசைமேல் வைத்து சென்றார்கள். வினோதமாகப் பார்த்த என்னைப பார்த்து சிரித்துக் கொண்டே " போன வாரம் வருமான வரி ஆய்வாளர் வாரம் மாறு வேஷத்தில் ஆய்வு பண்ணி இவ்வளவு கூட்டம் என்றால் இவ்வளவு வருமானம் வரணுமே என்று கேட்டார் . பக்கத்துலயே உக்காந்து எண்ணிக் கொள்ளுங்கள் என்று சொன்னேன் . மொத்தம் அறுபத்து ஐந்து ருபாய் சில்லறையை எண்ணி வைத்துவிட்டு கும்பிட்டு விட்டுப் போனார் " என்று சொன்னவரைப் பற்றிய பெரும் அபிப்பிராயம் மனதில் வந்தது.
அவரது பதிவுகளைப் பார்க்கும்போது மன நல மருத்துவராக இல்லாமல் ஒரு சராசரி பதிவராக சர்ச்சைகளில் முகமூடிக் கும்பல்களின் வாயில் புகுந்து புறப்பட்டுக் கொண்டு இருப்பது ஒரு வித பிம்ப உடைப்பாக இருக்கிறது. பயித்தியத்துக்கு வைத்தியம் பாக்கிற வயித்தியருக்கு பைத்தியம் பிடிச்சா..

No comments:

Post a Comment